Sunday, May 18, 2025

காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக சுபாஷினியின் 'தமிழர் புலப்பெயர்வு' நூல்

 



காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக சுபாஷினியின் 'தமிழர் புலப்பெயர்வு' நூல் விளங்கும்: டத்தோஸ்ரீ எம்.சரவணன்


https://nambikkai.com.my/detail/35840?fbclid=IwY2xjawNdiVhleHRuA2FlbQIxMQABHvCnXMBv-0weOm1jlIZyoFTTm-bVuHZKbxtReGLXWeampYVyH2PellNa-j01_aem_LwWKvFvoowY_z-nU_4T1ig

காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக சுபாஷினியின் 'தமிழர் புலப்பெயர்வு' நூல் விளங்கும்: டத்தோஸ்ரீ எம்.சரவணன் கோலாலம்பூர்: உலகத் தமிழர்களின் புலப்பெயர்வு குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டு அதனைத் தொகுத்து 'தமிழர் புலப்பெயர்வு' நூலாக வழங்கியுள்ள முனைவர் க. சுபாஷிணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் கூறினார். புலம்பெயர்ந்த மலேசியத் தமிழர்கள் தங்களோடு மொழி, கலை கலாச்சாரம், பண்பாடு, சமயம் இப்படி எல்லாவற்றையும் பேணிக்காத்து வந்தனர். அதனாலேயே மலேசியத் தோட்டங்களில் ஆலயங்களும், தமிழ்ப்பள்ளிகளும் நீங்கா இடம்பெற்றன. அப்படி உலகம் முழுதும் பரவியுள்ள தமிழர் வரலாற்றைத் தகுந்த சான்றுகளுடன் நிலைப்படுத்துவது அவசியமான ஒன்று. அதை வெற்றிகரமாகச் செய்து முடித்த முனைவர் சுபாஷினி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். காலங்கடந்தும் பேசப்படும் ஆவணமாக இந்த நூல் விளங்கும் என்று அவர் கூறினார். - மவித்ரன்


No comments:

Post a Comment