Tuesday, May 20, 2025

என் மாணவி உஷாராணி

 



பள்ளிக்கல்வியை முடித்து ஒரு ஆசிரியராக எனது பணியை மலேசியாவில் பினாங்கில் சில மாதங்கள் நான் தொடங்கிய போது பள்ளியில் முதலாம் ஆண்டு என்னிடம் படித்த உஷாராணி தான் படத்தில் இருக்கின்றார்.
குட்டி குழந்தை பெண்ணாக இருந்த உஷாராணி இன்றைக்கு உயர்கல்வி முடித்து மலேசிய பிரதமர் அலுவலகத்தில் செய்தி தொடர்பு பிரிவின் அதிகாரியாக பணிபுரிகின்றார்.
ஆச்சரியமாக இருக்கும்.. ஒவ்வொரு முறையும் உஷாராணியைப் பார்க்கும்போது. ஆசிரியர் பணியை விட்டு கணினி துறைக்கு மாறி மலேசியாவை விட்டு வெளிவந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
எனது தமிழர் புலப்பெயர்வு நூல் வெளியீட்டு விழாவிற்கு உஷாராணி என்னைத் தேடிக் கொண்டு வந்துவிட்டார். எப்போதும் என் மேல் மிகுந்த அன்பும் பாசமும் இவருக்கு உண்டு. டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களிடம் எனது மாணவி என அறிமுகப்படுத்தி வைத்த போது அவருக்கு ஆச்சரியம், எனக்கு பெருமை.
மலேசியா பினாங்கில் ஒரு அரசு தமிழ் பள்ளியில் படித்த குழந்தை இன்று நல்லதொரு பணியில் உயர் அதிகாரியாக பணிபுரிவது எனக்கு மட்டுமல்ல தமிழுக்கும் கிடைத்த பெருமை.
நல்வாழ்த்துக்கள் உஷாராணி
-சுபா

No comments:

Post a Comment