Tuesday, November 4, 2014

20ம் நூ. ஆரம்பகால நிலையில் மலேசியத் தமிழர்களின் தமிழ் மொழி பண்பாட்டு முயற்சிகள் - 1

ரப்பர் தோட்டத் தொழிளார்
மலேசியாவிற்கான தென்னிந்தியர்களின் அதிலும் குறிப்பாகத் தமிழக நிலப்பரப்பிலிருந்து கடல் கடந்து சென்ற தமிழர்களின் பயணம் என்பது பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த வரலாற்று உண்மை. அதில் தற்கால மலேசிய இந்தியர்களாக இருப்போரில் பலர்  19ம் நூ. இறுதியிலும், 20ம் நூ ஆரம்ப காலகட்டங்களிலும் குடி பெயர்ந்தவர்கள். 1920-1940 வரை கடல் வழியாக சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வழியாகவும் தமிழகத்தின் நாமக்கல் பகுதியிலிருந்து சென்றோர் தஞ்சமடைந்த கேரித்தீவு விழியப் பதிவுகளையும் விளக்கப்பதிவுகளையும் முன்னர் வெளியிட்டிருந்தேன்.

இன்று தற்செயலாக ஒரு பதிவு ஃபேஸ்புக் பக்கத்தில் கிடைத்தது. காண்க!  https://www.facebook.com/video.php?v=778633225509197&set=vb.100000875796950&type=2&theater 

உடல் உழைப்பு பணிகளுக்காக, குறிப்பாக, இரயில் பாதை அமைக்கவும், செம்பனை, இரப்பர் தோட்டங்களில் பணியாற்றவும் பலர் மலாயா வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட தோட்டப்பகுதி குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு பொருளீட்டுதல் என்பதே முதல் நோக்கமாக இருந்தாலும் வந்து சேர்ந்த புதிய இடத்தில் தமது மொழியையும் பண்பாட்டையும் மறந்தோராக இல்லாமல், தமிழ் மொழி, கலை சமய பண்பாட்டு விஷயங்களை மறக்காது தொடர்ந்து பேணி வரும் நிலையை இக்குமுகத்தினர் உறுதியாக கையாண்டனர். 

மலாயா நாடகக் குழு

அப்படி நடைபெற்ற முயற்சிகள் அறிந்து கொள்ள படவேண்டியவையே. கால ஓட்டத்தில் அக்காலத்து நிகழ்ந்த முயற்சிகள் பல உள்ளூர் மக்களினாலேயே மறக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது எனபதை நன்கு காண்கின்றோம். இதனை மீள்பார்வை செய்வது அவசியம் என்று நினைக்கின்றேன்.

அத்தகைய முயற்சிகளில்  திரு.கோ சாரங்கபாணி அவர்களது பெயர் மலேசிய பத்திரிக்கை உலகம் என்று மட்டுமல்லாது, தமிழ்க் கலை நாடக உலகில் சிறப்பிடம் பெறுவது. இவர் 1950ம் ஆண்டில் தமிழர் திருநாள் என்ற முயற்சியை  அன்றைய மலாயாவில் தொடக்கினார். இவர் சிங்கையிலிருந்து வெளிவந்த தமிழ் முரசு பத்திரிக்கையை 1935ம் ஆண்டில் தொடக்கியவர். இச்செய்திகளையும் இந்த சிறிய வீடியோ பதிவு சொல்கின்றது.  

சுதந்திரத்திற்கு முந்திய மலாயா தொடர்பான இத்தகைய விஷயங்களை இந்த இழையில் பதிவோம்.

நேரம் கிடைக்கும் போது மேலும் தொடர்கின்றேன்.

சுபா.

No comments:

Post a Comment