
இப்போது பல தமிழ் சினிமா படங்களில் மலேசியாவின் பல அழகிய இடங்களைப் பாடல் காட்சிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதிலும் முக்கியமாக, உலகின் மிக உயர்ந்த கட்டிடமான இரட்டைக் கோபுரங்களை இப்போது பல தமிழ் சினிமா பாடல் காட்சிகளில் காண முடிகின்றது. மலேசியாவிற்குச் செல்பவர்களும் எப்போதும் மலேசிய தலைநகரான குவாலாலும்பூர் (Kuala Lumpur) செல்வது தான் வழக்கம். அதற்கு அடுத்ததாக மலேசியாவில் பிரசித்தி பெற்ற மாநிலமாகத் திகழ்வது பினாங்கு மாநிலமாகும். நானும் பினாங்கில் தான் பிறந்தேன்..:-)
சிலர் தவறாக சிங்கப்பூரையும் மலேசியாவின் ஒரு பகுதியாக நினைத்துக் கொள்கின்றனர். இது முற்றிலும் தவறு; சிங்கப்பூர் ஒரு தனி நாடு. மலேசியா ஒரு தனி நாடு.
மலேசியாவில் மொத்தம் 13 மாநிலங்கள் இருக்கின்றன. அவை வடக்கிலிருந்து பெர்லீஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், த்ரெங்கானு, பஹாங், ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், சபா, சரவாக் ஆகும். இந்த பதின்மூன்றோடு மேலும் ஒரு மாநிலமாகக் கூட்டரசு பிரதேசங்கள் குவாலாலும்பூர் மற்றும் லாபுவான் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
மலேசியக் கொடியில் 14 (சிவப்பு + வெள்ளை) கோடுகள் இருக்கும். இவை பதினான்கு மாநிலங்களைக் குறிப்பவை.

நீல வர்ணம் பல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதைக் குறிக்கின்றது; பிறை நிலா, மலேசிய நாட்டின் மதம் இஸ்லாம் என்பதையும், மஞ்சள் வர்ணம் உயரிய தன்மையையும் குறிக்கின்றது. இந்த மஞ்சள் நிறம் மலேசியா அரசாட்சி செய்யப்படும் ஒரு நாடு என்பதைக் குறிப்பதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment