Tuesday, April 5, 2011

மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு

1.அறிமுகம்

கலாச்சாரக் கலவையும் அழகும் புதுமையும், நாகரிகமும் இயற்கை எழிலும், தூய்மையும் ஒருங்கே அமைந்த ஒரு நாடு மலேசியா. எனது இளமை காலம் தொட்டு சுதந்திர மலேசியாவின் படிப்படியான வளர்ச்சியை பார்த்தும் அனுபவித்தும் வருகின்றேன். எண்ணற்ற நினைவுகள் அவ்வப்போது மனதில் ஞாபகமாக நிழலாடும் போது அந்தச் சில கணங்கள் நேரத்தில் பின்னோக்கிச் சென்று அக்கணங்கள் அந்த ஞாபங்களில் வாழ்ந்து பின்னர் அவை முடிந்தவை என் தெளிவடைந்து வியந்து நான் நிற்பதுண்டு.


மலேசியாவில் அதிலும் குறிப்பாக பினாங்கில் எனது அங்கிருந்த காலகட்டத்திலேயே நான் நினைவு தெரிந்து பார்த்து அனுபவித்த பல விஷயங்கள் மனதில் ஆழத்தில் பதிந்து கிடக்கின்றன. 1970களில் இருந்த மலேசியா, பின்னர் 1980களில் அதற்குப் பின்னர் 1990களில் பின்னர் 2000ம் ஆண்டுகளில் என பகுத்துப் பார்த்தால் மலேசியாவின் வளர்ச்சி என்பது மிக அபரிதமானது. 1969ம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரம் சுதந்திர மலேசியாவின் சரித்திரத்தில் மறைக்கப்பட முடியாத ஒரு துயர நிகழ்வு.


13 மே என்பது மலேசியாவை பொறுத்தவரை இன்றளவும் கூட ஒரு துரதிஷ்டம் தரும் நாளாக கருதப்படும் ஒன்று. மலேசிய மக்கள் தொகையில் இரண்டு பெரிய குழுக்களான மலாய் இன மக்களுக்கும் சீன இன மக்களுக்கும் இடையே நிகழ்ந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். அரசாங்கம் அமுல்படுத்திய புதிய அரசாங்கக் கொள்கை மலாய் இனத்தவருக்குப் பல சலுகைகளை வழங்கும் வகையில் அமைக்கபப்ட்டதை தொடர்ந்து எழுந்த அதிருப்தி இனக்கலவரமாக வெடித்தது. நாடெங்கும் பயங்கரம் சூழ்ந்திருந்ததாக எனது தந்தையார் கூறுவார். தமிழர்கள் நேரடியாக இந்த கலவரத்தில் பாதிக்கப்படவில்லையென்றாலும் ஒரு வகையில் நாட்டு மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருந்த கால கட்டம் தான் அது. சாலையில் செல்லும் போதே மிகக் கோரமாக, பார்க்கும் சீனர்களை வெட்டிசாய்த்து விட்டும் செல்லும் மலாய் இனத்து மக்களையும், பார்க்கும் மலாய் இனத்தவரை தாக்கி அருவாளால் வெட்டும் சீனர்களைப் பார்த்தது பற்றி தகவல்கள் என் தந்தையார் கூறிக் கேட்டிருக்கின்றேன். இந்த காலகட்டத்தில் மலேசியாவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு சில மாதங்கள் அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் பீதியுடன் சில காலம் இருந்திருக்கின்றனர். மலேசியாவின் சுதந்திரத் தந்தை என அழைக்கப்படும் துங்கு அப்துல் ரஹ்மான் இந்த இனக்கலவரத்தின் அடிப்படையில் தனது பிரதமர் பதவியைத் துறந்தார்.


அதற்குப் பிறகு அவ்வப்போது உள்பூசல்கள் பல இருந்தாலும் கலவரம் மலேசியாவில் மீண்டும் தோன்றியதில்லை. 1969 மே 13 என்பதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு வளர்ச்சி நோக்கி மலேசியாவை கொண்டு செல்ல அனைவரும் பயணம் செய்த காலம் அது. எனது மலேசிய அனுபவம் முழுதும் இந்த காலகட்டத்தில் தான் அமைந்தது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் மீண்டும் பறபல விஷயங்கள் சிறு சிறு கலவரங்களாக தோன்றி மறைவதை பலரும் நாளிதழ்களிலும் இணையத்திலும் கூட வாசித்தும் கேள்விப்பட்டும் இருக்கலாம். இவை ஒரு புறம் இருப்பினும் மலேசியாவின் வளர்ச்சியும் அதன் எழிலான சூழலும் அனைவரையும் பிரமிக்க வைப்பது என்பதை மறுக்க முடியாது.



மலாயா 1957ல் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலாயா தீபகற்பம், சிங்கப்பூர் தீவு, வடக்கு போர்னியோ பகுதியான சபா, மேற்கு போர்னியோவின் பெரும் பகுதியான சரவாக் ஆகியவற்றை உள்ளடக்கி மலேசியாவாக 1963ல் உருபெற்றது. அதற்கு அடுத்த ஆண்டில் ஏற்பட்ட இணங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் ஏற்பட்ட திருப்தியின்மை அதனால் ஏற்பட்ட உள்ளூர் கலவரங்களால் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து செல்ல முடிவாகி தனி நாடாக 1965ல் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது.



மலேசியக் கொடியை உற்று நோக்கினால் அதில் இருக்கும் நட்சத்திரம் 14 கதிர்களைக் காட்டுவதைக் காணலாம். அவை 14 மானிலங்களைக் குறிப்பது. சிங்கப்பூர் இந்த அமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர் 13 மானிலங்கள் மட்டுமே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நான் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து கல்வி கற்றிருந்தாலும் கூட மலேசியா முழுமையையும் இது வரை பார்த்ததில்லை. அதிலும் தற்சமயம் தாய்நாட்டை விட்டு அயல்நாட்டில் குடியேறிய பின்னர் இதற்கான வாய்ப்பு சற்று குறைந்து விட்டது. அவ்வப்போது மலேசியா செல்லும் போது நான் இதுவரை சென்றிராத சில மானிலங்களுக்குச் சென்று பார்த்திராத புதிய இடங்களை காண நான் முயற்சிப்பதுண்டு. அந்த வகயில் சென்ற 2010ம் ஆண்டு இறுதியில் மலேசியா சென்ற போது எங்கு செல்லலாம் என யோசித்த போது மனதில் தோன்றியது ஒரு எண்ணம்...!


தொடரும்....

3 comments:

Rhea Jain said...

"Packers And Movers Delhi", "Logistics and Transportation. We have admittance to the entire geographic region of "Delhi India", selecting your articles, stuffs or things from the doorstep and moving all securely and solidly to the spot where you wish to discover. Utilizing first assets inside the strategy, we have a tendency to think giving the kind of administrations which leave a wow can engrave on the psyche of our clients. We have a tendency to be well-referred to "Movers And Packers" as a consequence of the standard, development, and mind that we have a tendency to imbue in our "administrations". Our particular group revels in serving you at whatever time of the day and that they are prepared to stay a sharp eye on every relegation (be it huge or little) along these lines, no one is left with even a small tad bit of discontent.
http://packers-and-movers-delhi.in/

Packers Movers Ahmedabad said...

This is useful content. really apreciate it! Please Visit Our Webpag:
http://packersmoversahmedabad.co.in/
Packers And Movers Ahmedabad" prompt moving, relocation and shifting services for people and corporation moving to "Amdavad" and round the India. For Movers Packers Ahmedabad city full target report on supply of revenue and effective Movers Packers in Amdavad, contact today 08290173333.
http://packersmoversahmedabad.co.in/packers-and-movers-vadodara-gujarat
http://packersmoversahmedabad.co.in/packers-and-movers-surat-gujarat
http://packersmoversahmedabad.co.in/packers-and-movers-gandhidham-gujarat
http://packersmoversahmedabad.co.in/packers-and-movers-rajkot-gujarat
http://packersmoversahmedabad.co.in/packers-and-movers-bhuj

Raksha Jain said...

Packers and Movers Mumbai is one of the most reliable and reputed removable companies in city of opportunities #Mumbai. #Shifting is very difficult task especially for a working couple because they both are busy in their job they don’t have time for the various task of shifting, in process of shifting includes various difficult, that’s why removable companies are in very demand.
Packers And Movers Nashik Maharashtra
Packers And Movers Osmanabad Maharashtra

Post a Comment