Sunday, December 8, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 13



மலாக்கா ஆற்றில் போட் பயணம்

மலேசிய நாட்டின் வரலாற்று பெருமை மிக்க ஒரு மானிலம் மலாக்கா. இந்திய சீன இந்தோனீசிய வர்த்தகர்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக வருகை புரிந்த ஒரு துறைமுக நகரம் இது. 15ம் நூற்றாண்டு இறுதி தொடங்கி போர்த்துக்கீஸியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என வருகை புரிந்து  இன்று சுற்றுப்ப்யணிகளைக் கவரும் ஒரு தலம் என்ற வகையில் புகழ் பெற்று விளங்கும் ஒரு நகரம். இங்குள்ள ஆபாமோசா கோட்டை போர்த்துக்கீஸியர்களால் கட்டப்பட்டது.

இங்கு நாம் காண்பது போட் பயணத்தின் போது மலாக்கா ஆற்றின் இரண்டு கறைகளிலும் இருக்கும் கட்டிடங்கள். இவை இத்தாலியின் வெனிஸை சற்றே ஞாபகப்படுத்தும் ஒரு வடிவம் தான். யுனெஸ்கோ இப்பகுதியை பாதுகக்கப்படும் ஒரு பகுதியாக அறிவித்த பின்னர் இங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் மலாய் நாட்டுப் பாரம்பரியத்தை விளக்கும் சித்திரங்கள் தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன. 2001ல் பார்த்த  போது இவை இந்த அழகோடு இல்லை.  கண்களைக் கவரும் வர்ணங்களில் சித்திரங்கள் கதை சொல்கின்றன.

சுபா

No comments:

Post a Comment