Wednesday, December 11, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 14



கேமரன் ஹைலாண்ட்ஸ் தேயிலைத் தோட்டம்

கிளந்தான் மானிலத்தின் எல்லைப் பகுதியாகவும்  பஹாங் மானிலத்தின் வடக்கு முனையில் இருக்கும் ஒரு மலைப்பகுதி இது. ஒரு பகுதி  பேராக் மானிலத்திலும் உள்ளது.

ஆச்சரியப்படுவீர்கள். இப்பகுதியின் அளவு சிங்கப்பூரின் சுற்றளவை ஒத்தது.

காரிலோ அல்லது பஸ்ஸிலோ இப்பகுதிக்கு பயணித்து செல்லலாம். சாலைப்பகுதி மிகத் தரமாக அமைக்கபப்ட்டிருப்பதால் கார் ஓட்டிச் செல்ல எந்த அச்சமும் தேவையில்லை.

இங்கே நிறைய தங்கும் விடுதிகள் இருக்கின்றன. டிசம்பர் மாதத்தை தவிர்த்தால் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாது கேமரன் ஹைலாண்ட்ஸ் பகுதியை முழுமையாக சுற்றிப்பார்த்து நல்ல சுவையான உணவு உண்டு மகிழ்ந்து வரலாம்.

ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது Sir William Cameron என்ற நில அளவையாளர் இப்பகுதியில் சேவையில் ஈடுபட்டிருந்தார். அவர் நினைவாக இந்த இடத்திற்கு Cameron Highlands  எனப் பெயர் வந்தது.
இங்கு மலைப்பகுதியில் 15 டிகிரி செல்ஸியஸ் வரை சாதாரண நாட்களில் அமைந்திருக்கும்.

1925ம் ஆண்டு வாக்கில் இங்கு பசுமை உற்பத்தி என்ற வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட ஆரம்பித்த போது தேயிலை, பூக்கள், காய்கறி தோட்டங்கள் விரிவாக வளர்ச்சி பெற ஆரம்பித்தன. தமிழகத்தின் நாமக்கல் பகுதியிலிருந்து வந்து சேர்ந்த பல தமிழர்கள் இப்பகுதியில் வேலைக்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் சந்ததியினர் பலர் இன்னமும் இங்கேயே வாழ்கின்றனர். மற்ற இடங்களைக் காட்டிலும் தமிழர்களின் எண்ணிக்கை இப்பகுதியில் சற்றே அதிகம். நான் பார்த்ததில் இரண்டு தமிழ் ஆரம்பப் பள்ளிகளும் இங்கிருக்கின்றன. ஆலயங்களோ ஏராளம். மலேசியாவில் எனது மனம் கவர்ந்த இடங்களில் இதுவும் ஒன்று.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_17.html

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

Post a Comment