Sunday, October 21, 2018

பேரா.முனைவர் ராமசாமி

பினாங்கு மாநில துணை முதல்வர் பேரா.முனைவர் ராமசாமி அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். மலேசியத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய நீண்ட கால ஆய்வில் ஈடுபட்டவர். இவரது மலேசியத் தோட்டத் தொழிலாளர் வாழ்வும் போராட்டங்களும் என்ற நூலை நேற்று எனக்குப் பரிசளித்தார்.
மலேசிய தோட்டப்புர மக்களின் வாழ்வியல் துன்பங்களை ஆழமாகப் பதிவு செய்திருக்கும் நூல் இது.
இவரது ஆய்வில் பிரசித்தி பெற்றது செலாஞ்சார் தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக இருந்து வந்தமையை கண்டுபிடித்து அதனை வெளிச்சப்படுத்தியது. இதுவே இவரது அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் அமைத்தது. கொத்தடிமைகளாக ஒரு தோட்டத்தில் மக்கள் வாழ்ந்து வந்த கொடுமையை 1980களில் வெளிப்படுத்தி அம்மக்களை மீட்கும் முயற்சியை இவர் தொடக்கியது அன்று மாணவப் பருவத்தில் இருந்த எனக்கு இன்றும் நினைவில் இருக்கின்றது.
படித்த, சமூக நலனில் அக்கறை கொண்ட முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கொண்டிருப்பதால் பினாங்கு மாநிலம் இன்று ஆக்கப்பூர்வமான வளர்ச்சி கண்டு வருகிறது!


-சுபா

No comments:

Post a Comment