Thursday, January 1, 2004

Happy New Year

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்




மலர்கின்ற ஒவ்வொரு நாளுமே ஒரு புது நாள் தான். ஆனாலும் டிசம்பர் 31 முடிந்து ஜனவரி 1 வரும் போது மட்டும் மனதில் ஒரு அதீதமான சந்தோஷம் நமக்கெல்லாம் தோன்றுகின்றது. இந்த நாளை பல எதிர்பார்pபுக்களுடனேயே எதிர் கொள்ளும் மனமும் கூட சேர்ந்து கொள்கின்றது. வருகின்ற புதிய ஆண்டில் மேலும் நல்ல நிகழ்வுகள் நடக்க வேண்டும், நல்ல செய்திகள் கிடைக்க வேண்டும் என்று நமது மனம் எதிர்பார்க்கின்றது.

திருவிழாவாக இருந்தாலும் சரி, புத்தாண்டு பண்டிகைகளாக இருந்தாலும் சரி, குடும்பத்தினருடன் கொண்டாடுவது போல வேறு மகிழ்ச்சியே இல்லை. இளம் வயதில் பெற்றோருடன் புத்தாண்டு கொண்டாடிய நினைவுகள் இனிமையாக இன்றும் மனதில் இருக்கின்றன. புத்தாண்டு ஸ்பெஷல் பூஜை வீட்டில் தவறாமல் இருக்கும். சுவையான பலகாரங்களையும் அம்மா தயாராக செய்து வைத்திருப்பார். அம்மாவின் சமையலுக்கு ஈடு சொல்வதற்கு உலகில் வேறு ஒன்றுமில்லை. ஒரு நாள் வீட்டில் குடும்பத்தாருடன் பொழுதைக் கழிப்பது இனிமையான ஒரு நிகழ்வுதானே.

ஜெர்மனிக்கு வந்த விட்ட இந்த 5 ஆண்டுகளில் புத்தாண்டை வரவேற்பது வித்தியாசமாகிப் போய்விட்டாலும் அம்மா அப்பாவுடன் இருந்த நாட்கள் மனதில் தோன்றி அந்த நினைவுகள் மகிழ்ச்சி படுத்துகின்றன. வேலை, உயர்கல்வி என குடும்பத்தாரை விட்டு பிரிந்து வாழும் பலருக்கும் இதே நிலைதானே!

நேற்றைய star பத்திரிக்கையை (http://www.thestar.com.my) படித்துக் கொண்டிருந்தபோது இதே போன்ற சிந்தனையுடன் வெளிவந்திருந்த ஒரு பேட்டியை படிக்க நேர்ந்தது. மலேசியப் பிரதமராக 22 ஆண்டுகள் இருந்த துன் மஹாதீர் அவர்களின் மகள் மரீனாவின் பேட்டி அது. தந்தை பதவி விலகிய பிறகு 22 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக கடந்த ஆண்டு (2003) சேர்ந்து கொண்டாடிய ரமடான் பண்டிகையைப் பற்றியும், புதுவருடத்தைப்பற்றியும் அவரது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைந்த ஒரு பேட்டி. அதனை வாசிக்க: http://www.thestar.com.my/news/archives/story.asp?ppath=\2003\12\31&file=/2003/12/31/features/6977515&sec=features

No comments:

Post a Comment