Thursday, November 28, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 10


செயிண்ட் அன் தேவாலயம்

பினாங்கின் புக்கிட் மெர்தாஜம் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயம் இது. மலேசியா மட்டுமன்றி சிங்கப்பூர் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பிரசித்தி பெற்ற ஒரு தேவாலயம் இது. ஆண்டு தோறும் ஜூலை மாத்த்தில் நடைபெறும் ஆலயத்திருவிழாவில் கலந்து கொள்ள பல்லாயிரம் மக்கள் புனிதயாத்திரை செய்து வந்து கொள்வர். கிறிஸ்துவ சமயத்தவர் என்று மட்டுமல்லாமல் தாவோ, புத்த, ஹிந்து மத்தினரும் இந்த புனித யாத்திரயில் வந்து கலந்து கொள்வர்.

1846ம் ஆண்டில் கட்டப்பட்டது இந்த தேவாலயம். காலணித்துவ ஆட்சியின் போது இப்பகுதியில் ஆங்கிலேயர்கள் அதிலும் குறிப்பாக கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுவோர் அதிகரிக்க ஆரம்பித்த வேளையில் செயின் அன் மேரி மாதாவிற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. இந்த தேவாலயம் அமைந்திருப்பது ஒரு மலைப்பகுதி. இங்கே பெருங்கற்கால பாறை எழுத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் ஒரு செய்தி.

இந்த திருவிழாவை விளக்கும் இரண்டு விழியப் பதிவுகள்:
http://www.youtube.com/watch?v=AIpfPfrwpvQ
http://www.youtube.com/watch?v=pmmlM7eatRc

சுபா

No comments:

Post a Comment