Thursday, November 14, 2013

மலேசியா - காட்சியில் அறிமுகம் - 4



பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி  கோயில் அடிவாரப் பகுதி. கீழே விநாயகர் கோயில், நாகர், இடும்பன் கோயில்கள் இருக்கின்றன. புதிதாக பிரமாண்டமான சிவபெருமான் சிலையை வடித்திருக்கின்றார்கள். 18ம் நூற்றாண்டிலேயே இங்கு முருகன் கோயில் அமைந்திருந்தமைக்கான தடயங்கள் கிடைக்கின்றன. ஏறக்குறைய 250 வருடங்கள் பழமை வாய்ந்த, சிறிய வேல் ஏந்தி நிற்கும் பாலதண்டாயுதபாணி கோயில் அருகில் நீர்வீழ்ச்சிப் பகுதியில் இருக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு பொதுமக்கள் சாதாரணமாகச் செல்ல முடியாது. அனுமதி பெற்று மட்டுமே செல்ல முடியும். பின்னர் 19ம் நூற்றாண்டு வாக்கில் சற்று இடம் மாற்றி தற்போது கோயில் இருக்கும் இடத்தில் ஆங்கிலேய அரசு கொடுத்த நிலத்தில் கோயிலைக் கட்டினார்கள் இங்குள்ள தமிழ் மக்கள். சென்ற ஆண்டு மலையின் மேலே பிரமாண்டமான கோயில் அமைக்கப்பட்டது. ஏறக்குறைய 512 படிகளைக் கடந்து மலை உச்சிக்குச் செல்ல வேண்டும் பாலதண்டாயுதபாணியைத் தரிசிக்க!

சுபா

No comments:

Post a Comment