Friday, December 19, 2003

தோல் பாவை - Wayang Kulit



இந்தியர்களுக்கு நன்கு பரிச்சயமான இராமயண காப்பியம் மலாய்க்காரர்களே அதிகமாக வாழும் மலேசியாவிலும் மிகப் பிரபலமான ஒரு பழங்கதையாக மதிக்கப்பட்டு வருகின்றது என்பது மற்ற இடங்களில் வாழ்கின்ற தமிழர்கள் பலருக்கும் தெரிந்திருக்கு வாய்ப்பில்லை. இராமன் சீதையைப் பற்றிய இந்த காப்பியம் இந்து அரசர்களால் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டே தீபகற்ப மலேசியாவிற்கு கொண்டுவரப்பட்டது.


இந்தக் கதையை, கற்றவர்கள் மற்றுமின்றி சாதாரண மக்களும் தெரிந்து வைத்திருக்குமளவுக்கு செய்த பெருமை தோல் பாவை என்று சொல்லப்படும் ஒரு வகை கலாச்சார விளையாட்டையே சாரும். இந்த விளையாட்டிற்கு Wayang Kulit என்பது மலாய் மொழிப் பெயர்.



பொம்மைகளைத் திரைக்குப் பின்னால் இருப்பவர் அசைத்துக் கொண்டிருக்க, கதையைப் பாடலாக மற்றொருவர் பாடிக் கொண்டிருப்பார். தோல் பொம்மையை அசைப்பவரை Dalang (டாலாங்) என்று சிறப்பாக அழைப்பார்கள். இவர் இந்த விளையாட்டில் கைதேர்ந்த விற்பன்னராக இருக்க வேண்டும். இந்த விளையாட்டிற்கென்று சில நியதிகளும் உண்டு. கதாநாயகன் மற்றும் ஏனைய நல்ல கதாமாந்தர்கள் வலது பக்கத்தில் காட்சியளிப்பார்கள். வில்னன்கலும் வில்லிகளும்:-) இடது பக்கத்தில் காட்சியளிப்பார்கள்.

மலேசியாவில் குறிப்பாக கிளந்தான் மாநிலத்தில் தான் இந்த வகை விளையாட்டை அதிகமாகக் காணமுடியும். உள்நாட்டில் இருப்பவர்களுக்கு இப்போதெல்லாம் இம்மாதிரியான பழங்கால கலாச்சார விளையாட்டுக்களில் ஆர்வம் ருப்பதில்லை. அதனால் வளர்ச்சியின்றி இந்தக் கலை படிப்படியாக மறைந்து வருகின்றது என்றே சொல்ல வேண்டும். அதோடு தீவிரவாத இஸ்லாமிய சட்டத்தை நிறுவ முயன்று கொண்டிருக்கும் கிளந்தான் மாநில அரசாங்கம் (கிளந்தான் திரங்காணு ஆகிய இரண்டு மாநிலங்களில் தான் இஸ்லாமிய தீவிரவாத கட்சி ஆட்சி அமைத்திருக்கின்றது) இஸ்லாமிய சமையத்துக்குப் புறம்பான பல விஷயங்கள் இந்த வகை கதைகளின் வழி மக்களுக்குச் செல்வதால் இதனைத் தடுக்க வேண்டும் என்று 1980ல் சட்டம் இயற்றியது. அதனால் சுற்றுப்பயணிகளுக்காக மட்டுமே தற்சமயம் ஒரு சில இடங்களில் Wayang Kulit காட்டப்படுகின்றது.

No comments:

Post a Comment